சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற குடிபோதை ஆசாமி

நெல்லையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற குடிபோதை ஆசாமி கைது செய்யப்பட்டார்.

Update: 2024-02-11 09:12 GMT

போதை ஆசாமியை பிடித்த மக்கள்

நெல்லை மாநகர டவுனில் நேற்று இரவு சிறுமியிடம் குடிபோதை ஆசாமி ஒருவர் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அந்த குடி போதை ஆசாமியை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்த டவுன் மாநகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த குடிபோதை ஆசாமி கைது செய்தனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News