திருமயம் அருகே லாரி மோதி விவசாயி பலி

திருமயம் அருகே லாரி மோதி விவசாயி பலியானர்.

Update: 2024-01-09 01:22 GMT

காவல் நிலையம் 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கரையான் பட்டியை சேர்ந்தவர் பாண்டி (58). திருமயம் சத்திய மூர்த்தி நகரை சேர்ந்தவர் ராமலிங்கம்(55). உறவினர்களான இருவரும் காரைக்குடி சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

பைக்கை ராமலிங்கம் ஓட்டினார். திருமயத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் அருகே வந்தபோது, பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த பாண்டி புதுகை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இதுகுறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து லாரி டிரைவர் மெய்யமலையை சேர்ந்த செந்தில் குமார் (35) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News