தனியார் செல்போன் டவர் அமைப்பில் தீ விபத்து !

நத்தம் அருகே தனியார் செல்போன் டவர் அமைப்பில் நேற்றிரவு தீப்பற்றியது. குடியிருப்பு பகுதிக்குள் பரவாமல் சேதத்தை தடுத்த தீயணைப்பு துறையினர்.

Update: 2024-03-25 09:53 GMT

தீ விபத்து

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் செட்டியார் குளத்தெரு பகுதியில் தனியாருக்கு (ஜியோ) சொந்தமான செல்போன் டவர் உள்ளது. இதன் அருகில் ஜெனரேட்டர், மின்கலம் உள்ளிட்டவைகள் அடங்கு அமைப்பு உள்ளது. இதில் நேற்றிரவு திடீரென புகை மூட்டம் உருவாகி தீ பற்ற ஆரம்பித்துள்ளது. இதை பார்த்த அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் உடனே நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடன் சம்பவ இடத்திற்கு வந்த குழு அங்குள்ள பியூஸ் கேரியர்களை அப்புறப்படுத்தி டவர் அருகில் பற்றிய தீயை பரவவிடாமல் தடுத்து முற்றிலுமாக அணைத்தனர். இப்பணி இரவு சுமார் 9.30 மணி முதல் 10.30 மணி வரை 1 மணி நேரம் நடந்தது.தீ விபத்துக்கான காரணம் அங்கு ஏற்பட்ட மின் கசிவா என்பது குறித்து விசாரணை செய்தனர்.
Tags:    

Similar News