வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து..

பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை குடியிருப்பு பகுதியில் தீ விபத்து - ஆறு வீடுகள் தீப்பற்றி எரிந்ததால் வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதம்..

Update: 2024-03-30 06:34 GMT
பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை இஞ்சிபாறை எஸ்டேட் LD டிவிசன் பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இந்த தொழிலாளர்கள் அதே பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட குடியிருப்பு பகுதிகளில் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் லட்சுமி, விமலா, பூபதி உள்ளிட்ட ஆறு பேர் வீடுகளில் தீ பற்றி எரிய தொடங்கியது. வீடுகள் தீ பற்றி எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி தங்களை பாதுகாத்துக் கொண்டனர் இருந்தாலும் தீ மள மளவென பற்றி எரிந்ததில் ஆறு வீடுகளும் முழுமையாக எரிந்து சேதமானது. அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வால்பாறை தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளில் திடீரென பற்றி எரிந்த தீ விபத்தால் வீடுகளில் இருந்த துணிகள், டிவி, பிரிட்ஜ், மற்றும் சான்றிதழ்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமானது.
Tags:    

Similar News