பட்டதாரி வாலிபர் தற்கொலை

திருச்சியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் சரவணன், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-03-12 17:23 GMT

பைல் படம்

திருச்சி டவுன் ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம். இவரது மகன் சரவணன் வயது 25. பிகாம் பட்டதாரியான இவர் தில்லைநகரில் உள்ள ரத்தப் பரிசோதனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார் திருமணம் ஆகாத நிலையில் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் வீட்டு குளியல் அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாய் புவனேஸ்வரி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்த வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News