கணவனால் மனைவி அடித்து கொலை!

குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவியை அடித்து கொலை செய்துள்ளார்.

Update: 2024-03-07 12:36 GMT
திண்டுக்கல்லில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். திண்டுக்கல் மாநகராட்சி பெரியார் நகர் பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வரும் முத்தையா என்பவர். இவர், குடும்ப தகராறு காரணமாக மனைவி லட்சுமி யை அடித்து கொலை செய்துள்ளார் . பின்பு தப்பி ஓட்டம் பிடித்தார். தகவல் அறிந்த நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முத்தையாவை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News