ராமநாதபுரம் பொதுமக்கள் பயன்பட்டுக்காக பள்ளிவாசல் திறப்பு !

கீழக்கரையில் அல் மஸ்ஜிதுர் ரய்யான் பள்ளி திறப்பு விழா ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Update: 2024-03-11 11:09 GMT

 பள்ளிவாசல் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இம்பாலா சுல்தான் காம்ப்ளக்ஸில் அல் மஸ்ஜிதுர் ரய்யான் பள்ளி திறப்பு விழா மாவட்ட அரசு காஜி சலாவுதீன் ஆலிம் உமரி அவர்கள் தலைமையேற்று பள்ளியை திறந்து வைத்தனர்.அல்மஸ்ஜிதூர் ரய்யான் இமாம் பசுருதீன் ஆலிம் ஹைரி .அவர்கள் கிராத் ஓதினார் அனைத்து ஜமாத்துகள் மற்றும் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். யூசுப் சாகிப் ஆலிம் ஹமீதி அவர்கள் வரவேற்பு உரையாற்றினார்கள் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் எம் கே இ உமர். அல்மக்துமியா பெண்கள் அரபுக் கல்லூரி முதல்வர் முகமது இப்ராஹிம் பாக்கவி .ஜாமியா இக்ஸானுல் உம்யான் பார்வையற்றோர் மதரஸா முதல்வர். முகமது சகில் தாவூதி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் டாக்டர் சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் மேலத்தெரு புதுப்பள்ளி கத்தீப் மன்சூர் ஆலிம் நூரிகீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டிகசீனா தானா என்ற செய்யது அப்துல் காதர் .கே. இ .சி டி ‌சேர்மன் முகமது மன்சூர் .இன்சாப் முகமது மற்றும் திரைப்பட நடிகர் நிழல்கள் ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஜஹாங்கீர் ஆரூஸி அவர்கள் தொகுத்து வழங்கினார் அல் மஸ்ஜிதூர் டிரஸ்டி சுல்தான் சையது இப்ராஹிம் அவர்கள் நன்றி உரையாற்றினார்கள். இதில் கீழக்கரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஜமாத்தார்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News