உளுந்தூர்பேட்டை அருகே கிராவல் மண் ஏற்றி சென்ற லாரி பறிமுதல்

உளுந்தூர்பேட்டை அருகே கிராவல் மண் ஏற்றி சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-05-30 08:50 GMT

காவல் நிலையம்

வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் நேற்று மதியம் 1 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நாகலுார் பஸ்நிறுத்தம் வழியாக வந்த டிஎண்15 யு2111 என்ற பதிவெண் கொண்ட லாரியை போலீசார் நிறுத்தியுள்ளனர்.

அப்போது, லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடினார். தொடர்ந்து, போலீசார் சென்று பார்த்ததில், லாரியில் 3 யூனிட் கிராவல் மண் இருந்தது தெரிந்தது. தொடர்ந்து, லாரியை போலீசார் பறிமுதல் செய்து ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றனர்.

இது தொடர்பாக, லாரி உரிமையாளர் பாலசுப்ரமணியன்,45; டிரைவர் பிரபாகரன் மகன் பிரகாஷ்,31; ஆகிய இருவர் மீதும் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News