மானாமதுரையில் இளைஞரின் கை துண்டிப்பு

மானாமதுரையில் இளைஞரின் கையை வெட்டிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

Update: 2024-03-10 11:30 GMT
மானாமதுரை இளைஞர் கை துண்டிப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை புதிய பேருந்து நிலைய பகுதியில் உள்ள டூவீலர் ஸ்டாண்டில் சங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஸ்டாண்டில் இரண்டு டூவீலர்களில் வந்த ஐந்து பேர் கொண்ட அடையாளம் தெரியாத மர்ம கும்பல் திடீரென சசிகுமாரை ஆயுதங்களால் வெட்டியதில் அவரது கைப்பகுதியில் உள்ள மணிக்கட்டு துண்டாகி கீழே விழுந்ததுள்ளது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மானாமதுரை காவல்துறையினர் உடலில் வெட்டு காயங்களுடன் கிடந்த சசிகுமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இச்சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News