ஒத்தமாந்துறையில் நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து

ஒத்தமாந்துறையில் நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து ஏற்பட்டது.

Update: 2024-05-23 12:17 GMT

கோப்பு படம்

.கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்கா ஒத்தமனந்துறை பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி வயது 64. யுவர் மே 19ஆம் தேதி இரவு 9 மணி அளவில் தாராபுரத்தில் இருந்து கரூர் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். உத்தமந்துறை அருகே நடந்து சென்ற போது, கொத்தமந்துறை பகுதியைச் சேர்ந்த தாமோதரன் ஓட்டிச் சென்று டூ வீலர் நடந்து சென்ற வேலுசாமி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். தாமோதரன் வாகனத்துடன் கீழே விழுந்ததில் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் வேலுசாமிக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதே போல் தாமோதரனை கரூர் அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் இந்த சம்பவம் குறித்து வேலுச்சாமி அளித்த புகார் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை அஜாக்கிரதையாகவும், வேகமாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய தாமோதரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News