மளிகை கடைக்காரரை வெட்ட முயற்சித்தவர் அதிரடி கைது !

தாழையூத்து அருகே மளிகை கடைக்காரரை வெட்ட முயற்சித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-03-16 06:18 GMT

police

நெல்லை மாவட்டம் தாழையூத்தை சேர்ந்த தங்கப்பாண்டி அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.நேற்று இவரது கடைக்கு சங்கர் நகரை சேர்ந்த ஹரிபாண்டியன் என்பவர் வந்த போது சிகரெட் வாங்குவது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு ஹரிப்பாண்டி தங்கப்பாண்டியை அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளார். இது குறித்து தங்கபாண்டி அளித்த புகாரின் அடிப்படையில் தாழையூத்து போலீசார் இன்று (மார்ச் 16) ஹரி பாண்டியனை கைது செய்தனர்.
Tags:    

Similar News