ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு மையம் திறப்பு !
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு குழு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
Update: 2024-03-21 06:11 GMT
சிவகங்கை மாவட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலை யொட்டி அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் வீடியோ விளம்பர ஒளிபரப்பிற்கு அனுமதி பெற ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் வெளிவரும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள், பிரச்சார செய்திகள், வேட்பாளர்கள் குறித்து வெளியிடப்படும் செய்திகள், கருத்துகள் ஆகியவற்றை கண்காணித்து வருகின்றனர். இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாவது தளத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் ஊடக கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.