வயிற்று வலியால் அவதிப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை.
துறையூர் அருகே கொதம்பட்டியில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர் விஷம் குடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
Update: 2024-03-26 07:05 GMT
தற்கொலை
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கொதம்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் 55 வயதான ராமசாமி. இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25 ம் தேதி மாலை வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கிக் கிடந்தார்.இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்ததனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.