திருவாரூர்: மது விற்பனை செய்த நபர் கைது

திருவாரூர் அருகே நன்னிலத்தில் மது விற்பனை செய்த நபர் கைது

Update: 2023-11-30 06:58 GMT

மது விற்பனை செய்தவர் கைது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் அருகே நன்னிலம் சுற்று வட்டார பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நன்னிலம் அருகே உள்ள திருப்பணிப்பேட்டை பாலம் அருகே நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் திருப்பணிப்பேட்டையைச் சேர்ந்த வினோத் வயது 35 என்பதும் அவர் மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் வினோத் மீது வழக்கு பதிவு செய்து  கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பத்து மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News