சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஒருவர் கைது

வெள்ளகோவில் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஒருவரை வெள்ளகோவில் காவல்துறையினர் கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-05-15 15:03 GMT

காவல்துறை விசாரணை


காங்கேயம் அருகே உள்ள வெள்ளகோவில் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட அப்பாதுரை (24) என்பவரை இன்று காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஏழு மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News