புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது
குமாரபாளையத்தில் புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது செய்யப்பட்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-05 07:11 GMT
புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ.க்கள் சந்தியா, தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். சின்னப்பநாயக்கன்பாளையம் பெராந்தர்காடு பகுதியில் உள்ள டீ கடை ஒன்றில் புகையிலைப் பொருட்கள் விற்பது தெரியவந்தது. நேரில் சென்ற போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் பெயர் முனிராஜ், 43, என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ஐந்து புகையிலை பேக்கட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.