புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர் கைது
பெரியகுளம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர் கைது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-23 04:39 GMT
புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபர் கைது
தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலைய சார்பாக பிரேம் ஆனந்த் தலைமையிலான காவல்துறையினர் வடகரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது வடகரை பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்காரர் சிவக்குமார் என்பவரை கைது செய்தனர் . மேலும் அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.