71 மணி நேரத்தில் என்ன நடக்கும் புதுக்கோட்டையில் போஸ்டரால் பரபரப்பு!

நிகழ்வுகள்

Update: 2024-02-29 10:24 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மர்ம போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் அரசியல் நோக்கங்கள் ஒருவித பரபரப்புடன் இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக புதுக்கோட்டை மட்டும் இல்லாது புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்டா வர சொல்லுங்க? எம்பியை காணவில்லை என்ற என்ற ஒட்டப்பட்டிருந்த போஸ்டரால் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் புதுக்கோட்டையில் இன்று காலை 71 மணி நேரத்தில் என்ன நடக்கும் என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அரசியலில் அடுத்து என்ன நடக்குமோ? என்ற பரபரப்பு தற்பொழுது சுற்றியுள்ளது. பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர உள்ள நிலையில் இவ்விதமாக போட்டி போட்டு ஒட்டும் போஸ்டரால் அரசியல் களம் மட்டும் அல்லாது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News