மீன்பிடி வலையில் சிக்கிய மலைப்பாம்பு
கள்ளக்குறிச்சி அருகில் மீன்பிடி வலையில் மலைப்பாம்பு சிக்கியுள்ளது.;
By : King 24x7 Website
Update: 2023-10-28 09:46 GMT
மலைப்பாம்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாணாபுரம் பெரிய ஏரியில் மீன்பிடி வலையை பயன்படுத்தி அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது மீன்பிடி வலையில் மலைப்பாம்பு ஒன்று சிக்கியதால் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மற்றும் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் கடும் அச்சமடைந்தனர்.