கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் பலி

கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது வலிப்பு வந்து தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி. போலீசார் விசாரணை.

Update: 2024-02-20 06:34 GMT

பள்ளி மாணவன் பலி 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் மகன் ராஜா வயது 14. பள்ளி மாணவன் கிணற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். கிணற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது வலிப்பு வந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் தீ அணைப்பு நிலைய அலுவலர் விஜயன் தலைமையான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பள்ளி மாணவன் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதுகுறிப்பு சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
Tags:    

Similar News