கடம்பூரில் குட்கா விற்பனை கடையை சோதனை !
கடம்பூரில் குட்கா விற்பனை கடையை போலீஸார் சோதனை செய்தனர்.
Update: 2024-06-14 09:39 GMT
கடம்பூரில் குட்கா விற்பனை கடையை சோதனை செய்யும் போலீஸார் சத்தி அடுத்த கடம்பூர் மலைப்பகுதி, இருட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (42) இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யபட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததாக கடந்த 5-ந்தேதி கடம்பூர் போலீசாரக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடையை கடம்பூர் போலீஸார் சோதனை செய்து அவரிடம் விசாரனை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ராஜாவின் மளிகை கடைக்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விற்பனை செய்த குற்றத்திற்காக கடையை பூட்டி சீல் வைத்து சென்றனர்.