திருச்சி : புத்தாண்டு கொண்டாட்டம் - சிறப்பு திருபலி

திருச்சி திருவெறும்பூர் ஆர்.கே.புரத்தில் உள்ள அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது .

Update: 2024-01-01 02:52 GMT

திருச்சியில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது

2024 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. குறிப்பாக கிறிஸ்துவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள ஆர்.கே.புரம் அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் 2023ம் ஆண்டிற்கு நன்றி தெரிவித்தும், 2024ம் ஆண்டு பிறப்பை வரவேற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஆலய பங்குத்தந்தை ஆண்டனி சுந்தரபாண்டியன் சிறப்பு திருப்பலியை நடத்தினார். தொடர்ந்து புத்தாண்டை வரவேற்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள், வானவேடிக்கைகள் நடைபெற்றது. புத்தாண்டு பிறப்பின் போது ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். இந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டு இறை வழிபாடு நடத்தினர்.
Tags:    

Similar News