ஆன்மீக தொடர் சொற்பொழிவு

திருபுவனம் காமராஜ் நகர் பால விநாயகர் கோயிலில் ராமாயண ஆன்மீக தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி வரும் 22ம் தேதி வரை நடக்கிறது.

Update: 2024-05-19 07:22 GMT

பைல் படம் 

திருபுவனம் காமராஜ் நகர் பால விநாயகர் கோயிலில் ராமாயண ஆன்மீக தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி தொடங்கியது. இக்கோயிலில் தினமும் மாலை 6 முதல் 8 மணி வரை நடக்கும் இத்தொடர் சொற்பொழிவில் ராமனின் பிறப்பு, சீதாராம கல்யாணம், பாதுகா பட்டாபிஷேகம், அனுமத் பிரபாவம், விபீஷணன் சரணாகதி, ராமநாம மகிமை,சீதாராம பட்டாபிஷேகம்,முக்திக்கான திறவுகோல் ஆகிய தலைப்புகளில் தொடர் சொற்பொழிவு வரும் 22 ம் தேதி வரை நடக்கிறது. பிரம்மரிஷி வாசுதேவானந்தா சுவாமிகள் தொடர் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். ஏற்பாடுகளை பால விநாயகர் கோயில் நிர்வாக கமிட்டினர் மற்றும் காமராஜ் நகர்வாசிகள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News