மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு இலவசமாக முடி திருத்தம் செய்த மாணவி
Update: 2023-12-20 08:01 GMT
வேலூர் அருகே அல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் நான்காம் வகுப்பு மாணவி மோனிகா சிறுவயதில் இருந்தே சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். தான் சேர்த்து வைத்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதி மற்றும் புயல் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி அப்பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சிறுவர்களுக்கு மாணவி மோனிகா தந்தையுடன் இணைந்து இலவசமாக முடி திருத்தம் செய்தார். சமூக சேவையாக முடி திருத்தம் செய்ததாக அந்த மாணவி கூறினார்.