இரயில் படிக்கட்டில் பயணித்த மாணவர் தவறி விழுந்து பலி

ஜோலார்பேட்டை அருகே இரயிலின் படிக்கட்டில் பயணித்த கல்லூரி மாணவன் தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Update: 2024-01-07 06:55 GMT


செபாஷ்அலி


 கேரள மாநிலம், மலப்புரம் பலசிரமாத் பகுதியை சேர்ந்த அப்துசலீம் மகன் செபாஷ்அலி (20) இவர் அதே பகுதியில் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில் 5 பேராசிரியர்கள் மற்றும் 22 மாணவர்கள் ஹைதராபாத்திற்கு பயிற்சிக்காக சென்று உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு கேரளா திரும்பி செல்வதற்காக காச்சிகுடாவிலிருந்து மங்களூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தனர் அப்போது இன்று விடியற்காலை 5மணியளவில் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் அருகே இரயில் வந்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் கை கால்களில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த தகவல் அறிந்த ஜோலார்பேட்டை இரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயிற்சிக்காக சென்று வீடு திரும்பிய நிலையில் இரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் மாணவர்களுடைய ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
Tags:    

Similar News