விபத்தில் கால் முறிவு மன உளைச்சலால்  வாலிபர் தற்கொலை

குமாரபாளையத்தில் விபத்தால் கால் முறிவு மன உளைச்சலால்  வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-02-14 06:50 GMT

விபத்தில் கால் முறிவு மன உளைச்சலால்  வாலிபர் தற்கொலை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கலைமகள் வீதியில் வசிப்பவர் ஜீனத்பேகம், 30. கார்மெண்ட்ஸ் நிறுவன கூலி வேலை. இவரது கணவர் கவுசிக், 33. தனியார் நிறுவன கூலி. கவுசிக்க்கிற்கு ஆறு மாதம் முன்பு, தொழிற்சாலையில் நடந்த விபத்தில் வலது கால் முறிவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சையில் இருந்து வரும் இவரால் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தார். நேற்றுமுன்தினம் மாலை 04:00 மணியளவில் வீட்டில் உள்ள அறையில், பேனில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதாக, தன் குழந்தைகள் சொல்லியதை கேட்டு நேரில் வந்த ஜீனத், தன் தம்பி காதர்செரிப் உதவியுடன் கணவரை கீழே இறக்கி, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். இவரை பரிசோதித்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசில் ஜீனத் புகார் கொடுத்தார். இதன்படி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News