ஆரணி அருகே வாலிபருக்கு கத்திக்குத்து
ஆரணி அருகே வாலிபருக்கு கத்திக்குத்து; போலீசார் விசாரணை நடக்கிறது.
Update: 2024-06-14 14:03 GMT
ஆரணி அருகே வாலிபருக்கு கத்திக்குத்து; போலீசார் விசாரணை நடக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ராட்டிணமங்கலம் கிராமத்தை சேர்ந்த கோபிநாத் (வயது 19). இவருக்கும் அதே தெருவை சேர்ந்த சந்தோஷ் (23) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோபிநாத் சந்தோஷை கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து ஆரணி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.