கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

Update: 2023-12-17 11:47 GMT

கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் மாத்தூர் கடை வீதியில் வாலிபர் ஒருவர் கையில் கத்தியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் அங்கு சென்று கடைவீதியில் கத்தியுடன் நின்று கொண்டு வணிகர்கள் மற்றும் பொதுமக்களை மிரட்டிய நபரை பிடித்து விசாரித்தனர். அவர் மாத்தூரை சேர்ந்த விக்னேஷ் வயது 25 என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் கீரனூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News