பூதப்பாண்டி அருகே பழையாற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்

பூதப்பாண்டி அருகே பழையாற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர். இன்று 2-ம் நாள் தேடுதல்.

Update: 2024-07-04 05:41 GMT

2-ம் நாள் தேடுதல்

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அடுத்துள்ள வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் 32 இவர் தனது மாடுகளை குளிப்பாட்ட நேற்று மாலை பழையாற்றுக்கு வந்திருந்தார். மாட்டை குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது திடீரென காட்டாற்று வெள்ளம் சூழ்ந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் மணிகண்டனை காட்டட்டு வெள்ளம்  அடித்து சென்றது. அங்கு நின்றவர்கள் இதை கண்டு உடனடியாக நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து மணிகண்டனை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில்  மாடுகள் வீடு வந்து சேர்ந்தும், மணிகண்டன் வரதால் அவரது தாய் தாணம்மாள் என்பவர் மகனை தேடினார். அப்போதுதான் மணிகண்டனை காட்டாற்று வெள்ளம் இழுத்துச் சென்றதாகவும் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதும் அவருக்கு தெரிய வந்தது. இதை கேட்டு பதறிய  தாய் சோகத்துடன் பழைய ஆற்றின் கரையில் அழுதபடி இருந்தது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. நேற்று இருட்டியதால் தீயணைப்பு துறையினர் தேடும் பணியை நிறுத்தினர். இன்று 2-ம் நாளாக உடல் தேடும் பணி நடக்கிறது.
Tags:    

Similar News