சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலையில் பயங்கர தீ விபத்து

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தீப்பெட்டி தயார் செய்யும் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2024-02-08 08:38 GMT
தீவிபத்து

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் அதிபதி கிரகத்துரை என்பவருக்கு சொந்தமான கிரகம் என்ற பெயரில் தீப்பெட்டி தயார் செய்யும் ஆலை இயங்கி வருகிறது.நேற்று மாலை பணியாளர்கள் வழக்கம் போல் ஆலையை பூட்டி சென்றுவிட்ட நிலையில் ஆலை வளாகத்தில் உள்ள ஒரு அறையில் வாட்ச்மேன் படுத்து தூங்கிய நிலையில் நள்ளிரவு தீப்பெட்டி தயார் அறையில் இருந்து தீ பற்றி எரிய தொடங்கிய நிலையில் வாட்ச்மேன் சுதாரித்து கொண்டதால் உடனடியாக சக பணியாளர்களும்,

சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்து உள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர், சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் பல லட்ச மதிப்பிலான முழுமையாக தயார் செய்த தீப்பெட்டிகள் தீயில் எரிந்து நாசமாயின. மேலும்3 அறைகள் முற்றிலும் சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்து திருத்தங்கல் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டன.

Tags:    

Similar News