வடமதுரை அருகே கருங்கல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

வடமதுரை அருகே அனுமதி இன்றி கருங்கல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல், செய்த நிலையில் டிரைவர் தப்பி ஓட்டம் பிடித்தார்.

Update: 2024-06-16 16:41 GMT

டிப்பர் லாரி பறிமுதல்

திண்டுக்கல், வடமதுரை ரயில் நிலைய சாலையில் மதுரை மண்டல புவியியல் கனிமவளத்துறை மற்றும் சுரங்கதுறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்திய போது லாரியை நிறுத்திய டிரைவர் தப்பி ஓடினார்.

பின்னர் அதிகாரிகள் லாரியை சோதனை செய்த போது அதில் கருங்கல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் வடமதுரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் .இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News