சாலையில் நடந்து சென்ற பெண் மீது கார் மோதி விபத்து

திருவட்டாறு அருகே சாலையில் நடந்து சென்ற பெண் கார மோதி படுகாயம்.

Update: 2024-04-27 05:55 GMT

காவல்துறை விசாரணை


திருவட்டார் அருகே புத்தன்கடை மண் விளை பகுதியை சேர்ந்தவர் றோஸ்லி.இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பேக்கரி கடையில் வேலை செய்கிறார். சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து திருவட்டார் செல்வதற்காக ரோட்டோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது பொன்மனை பெருவள்ளி கடவு பகுதியைசேர்ந்த ரெகு ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக றோஸ்லி மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்தவரை அப்ப குதியினர் மீட்டு மார்த்தாண்டம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.இது குறித்த புகாரின் பேரில், திருவட்டார் போலீசார் ரெகு மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News