செங்கோட்டை அருகே நீா்த்தேக்கத்தில் குதித்து இளைஞா் தற்கொலை

செங்கோட்டை அருகே நீா்த்தேக்கத்தில் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை.

Update: 2024-01-09 06:05 GMT

இளைஞா் தற்கொலை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை-வல்லம் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் சு.மாரியப்பன் (30). தனியாா் நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வந்த இவருக்கு, அதிகளவில் கடன் இருந்ததாம். இதனிடையே, அவரைக் கடந்த 3 நாள்களாக காணவில்லையாம். இந்நிலையில், செங்கோட்டையில் உள்ள மோட்டை அணை நீா்த்தேக்கத்தில் அவா் இறந்துகிடந்தது தெரியவந்தது. அவா் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தகவலின்பேரில், செங்கோட்டை போலீஸாா் சென்று அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு கூறாய்வுக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Tags:    

Similar News