ரயில் மோதி இளைஞர் பலி

திண்டுக்கல் அருகே சீலப்பாடியில் ரயில் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-02-21 07:50 GMT

பைல் படம் 

வடமதுரை அருகேயுள்ள தென்னம்பட்டி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமர் பெருமாள் (23). திண்டுக்கல்-பழனி சாலையிலுள்ள தனியார் பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். சீலப்பாடி, DIG முகாம் அலுவலகம் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் திண்டுக்கல் வழியாக சென்ற ரயிலில் அடிபட்டு நேற்று சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து திண்டுக்கல் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News