பள்ளத்தில் விழுந்த இளைஞர் உயிரிழப்பு !

நீலகிரிக்கு சுற்றுலா வந்த இளைஞர்களுள் ஒருவர் 300 அடி பள்ளத்தில் விழுந்ததில் உயிரிழந்தார்.

Update: 2024-03-16 05:54 GMT

இளைஞர் உயிரிழப்பு

தேனி மாவட்டத்திலிருந்து நீலகிரிக்கு சுற்றுலா வந்த 10 இளைஞர்கள் சட்டவிரோதமாக கொலக்கம்பை அருகே உள்ள செங்குட்ராயன் மலை மீது நேற்று மாலை 3 மணி அளவில் சென்ற நிலையில் குளவி தாக்கியதில் திசையறியாது நாலாபுறமும் இளைஞர்கள் ஓடிய உள்ளனர். இந்நிலையில் இரவு 7 மணி அளவில் அனைவரும் சந்தித்துக் கொண்ட போது பிரவீன் என்ற இளைஞரை மட்டும் காணவில்லை. இன்று காலை முதல் வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பிரவீன் என்ற இளைஞரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். டிரோன் உதவியுடன் தேடும் போது அந்த இளைஞரின் சடலம் தென்பட்டுள்ளது. இளைஞரின் சடலத்தை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News