கரூர் அருகே பைக்கை முந்தி சென்ற கார் மோதி இளைஞர் உயிரிழப்பு

கரூர் அருகே பைக் முந்தி சென்ற கார் மோதி இளைஞர் உயிரிழந்தார்.

Update: 2024-04-09 15:21 GMT

காவல் நிலையம் 

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, வளையல் காரன்புதூர் அருகே உள்ள ஆர். புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாயவன் மகன் திருநாவுக்கரசு வயது 22. இவர் ஏப்ரல் 8-ம் தேதி காலை 11 மணியளவில்,

கரூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது டூவீலர் வீரராக்கியம் பகுதியில் செயல்படும் வி.கே. கொசுவலை கம்பெனி அருகே சென்று கொண்டிருந்தபோது, டிஎன் 38 சிஜே 3280 என்ற எண் கொண்ட கார்,

திருநாவுக்கரசு ஓட்டிச் சென்ற டூவீலரை முந்தி செல்லும் போது, டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த திருநாவுக்கரசுக்கு தலையில் அடிபட்டு சம்பவ இடத்தில் துடி துடித்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஆர்.புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராஜீவ் காந்தி வயது 39 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த திருநாவுக்கரசின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,

இது தொடர்பாக காரை வேகமாக ஓட்டி உயிர் இழப்பு ஏற்பட காரணமான கார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மாயனூர் காவல்துறையினர்.

Tags:    

Similar News