ஆத்தூர் : அறிவு சார் மையம்,நூலகம் முதலமைச்சர் திறப்பு !

ஆத்தூர் புதுப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட அறிவு சார் மையம் நூலக கட்டடத்தை காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்

Update: 2024-03-11 07:10 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியில் கலைஞரின் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் 2022 ஆம் ஆண்டு நூலகம் மற்றும் அறிவு சார் மையம் கட்டிட பணிகள் நடைபெற்று முடிவற்றது.பணிகள் முடிவுற்ற நிலையில் கடந்த சில மாதங்களாக அறிவு சார் மையம் மற்றும் நூலகம் திறக்கப்படாமல் இருந்தது மேலும் போட்டித் தேர்வுக்கு பயிலும் மாணவ மாணவிகள் அறிவு சார் மைய கட்டிடத்தை பிறக்க கோரிக்கை விடுத்து இருந்தனர். இந்நிலையில் தர்மபுரியில் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்த போது நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக நூலகம், அறிவு சார் மையக் கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஆத்தூர் நகர மன்ற தலைவர் உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News