காங்கேயம் காவல் நிலைய ரவுண்டானாவில் கார், பைக் மோதி விபத்து
காங்கேயம் காவல் நிலைய ரவுண்டானாவில் கார் மற்றும் பைக் மோதி விபத்து உண்டானது.
Update: 2024-03-30 06:46 GMT
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ரவுண்டானா பகுதியில் நேற்று மாலை சுமார் 5.45 மணி அளவில் தாராபுரம் சாலையில் இருந்து வந்த காரும் மோட்டார் பைக்கும் மோதி விபத்தானது. இதில் பைக்கில் வந்த 21 வயது இளைஞருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்கு கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து காங்கேயம் போலிசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.