ஆதியோகி சிவன் சிறப்பு பூஜை

ராசிபுரத்தில் ஈஷா யோக மையம் சார்பில் நடைபெற்ற ஆதியோகி சிவன் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-02 10:03 GMT

சிறப்பு பூஜை 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பல்வேறு இடங்களில் கோயமுத்தூர் பகுதியில் இருந்து வாகனத்தின் மூலம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த 10.அடி உயரம் கொண்ட சிவனின் திருவுருவத்தைக் கொண்டு பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வழிபாடு செய்யும் வகையில் சிறப்பு பூஜைகள் நடத்தி பல்வேறு சிவன் பாடல்கள் பாடி சிவ பக்தர்கள் சிவனை வணங்கினர்.

ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் முன்பாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஈசா யோக மையம் சார்பில் அழைத்துவரப்பட்ட சிவனின் வாகனம் பக்தர்கள் கண்டு சாமி தரிசனம் செய்து பக்தி பாடல்கள் பாடி வழிபட்டனர். தொடர்ந்து சிவனுக்கு மகா தீபாரனை காண்பிக்கப்பட்டு அனைவரும் சாமி தரிசனம் செய்தனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் மாதம் வரை இந்த சிவன் சாமி அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News