ஆதிதிராவிடர் நல கல்லூரியில் மாணவர் விடுதி பூமி பூஜை

நாமக்கல் ஆதிதிராவிடர் நல கல்லூரியில் மாணவர் விடுதி பூமி பூஜை நடந்தது.

Update: 2024-02-06 08:54 GMT

ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதி கட்டும் பணி -இராஜேஸ்குமார் எம்.பி துவக்கி வைத்தார் நாமக்கல் மாவட்டம், மோகனூர் வட்டம், லத்துவாடியில் ரூ.7.59 கோடி மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதி கட்டும் பணி துவக்க விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமை தாங்கினார். அட்மா குழுத்தலைவர் பழனிவேலு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வெ.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், நாளது வரை அனைத்து பாட பிரிவிலும் தேர்ச்சி பெற்ற, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த முதலாமாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாம் ஆண்டில் இளநிலை மற்றும் முதுகலை பயின்று வரும் 11 மாணவர்களுக்கு தலா ரூ.10,000/- வீதம் மொத்தம் ரூ.1,10,000/- கல்வி ஊக்கத் தொகையினை தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்து, கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News