மேட்டூரில் அதிமுக சார்பில் ரத்ததான முகாம்
மேட்டூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-12 17:06 GMT
அதிமுக நிர்வாகிகள்
மேட்டூர் அருகே ஜலகண்டாபுரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு சேலம் ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் பேரூர் அதிமுக சார்பில் பேரூர் செயலாளர் எஸ்.ஆர்.டி. சிவக்குமார் ஏற்பாட்டில் மரக்கன்றுகள் வழங்கும் விழா, மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது..
இந்த ரத்த தான முகாமினை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன் மற்றும் அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் ஆகியோர் துவக்கி வைத்து நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி சிறப்பித்தனர்.
தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன் ரத்ததானம் செய்ததை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.