வீரபாண்டி மேற்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்

வீரபாண்டி மேற்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

Update: 2024-02-16 06:51 GMT


வீரபாண்டி மேற்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.


வீரபாண்டி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பாலம்பட்டி, உத்தமசோழபுரம், புத்தூர் ஆகிய ஊராட்சிகளில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறி தி.மு.க. அரசை கண்டித்தும், அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கியும் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வீரபாண்டி ஒன்றிய குழு தலைவரும், மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான வருதராஜ் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் சேலம் புறநகர் மாவட்ட செயலாளரும், மாநில மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவருமான ஆர்.இளங்கோவன், தலைமை கழக பேச்சாளர் சுந்தரபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் வீரபாண்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மனோன்மணி, உத்தமசோழபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், ஒன்றிய துணை செயலாளர் முருகன், ஒன்றிய மாணவரணி செயலாளர் செல்வகுமார், மாவட்ட கவுன்சிலர் பழனிச்சாமி, ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ரமேஷ், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News