சிறுநீரக நோயால் பாதிப்பு: முதியவர் விஷம் குடித்து தற்கொலை

கரூர் அருகே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட முதியவர் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2024-04-29 13:02 GMT

காவல் நிலையம்

 ரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் கிழக்கு, கோவிந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் வயது 61. இவருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டு கடந்த 2- வருடங்களாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டும் அவருக்கு குணமாகவில்லை. இதற்காக நிறைய பணத்தையும் அவர் செலவு செய்து விட்டார்.

தனக்கு குணமாகாததால் விரக்தி அடைந்த தங்கவேல், ஏப்ரல் 27ஆம் தேதி மாலை 6 மணி அளவில், கோவிந்தம் பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரது மனைவி மல்லிகா தங்கவேலை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

Advertisement

அங்கு சிகிச்சையில் இருந்து வந்த தங்கவேல் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 28ஆம் தேதி உயிரிழந்தார். இதுகுறித்து மல்லிகா காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பெயரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர்,

உயிரிழந்த தங்கவேலு உடலை, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags:    

Similar News