வேளாண் கல்லூரி மாணவிகள் காய்கறிகள் அறுவடை

திருச்சி மாவட்டம் வாழ்மால்பாளையத்தில் வேளாண் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் காய்கறிகள் அறுவடை செய்தனர்.

Update: 2024-04-09 08:37 GMT

காய்கறி அறுவடை செய்யும் மாணவிகள்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வாழ்மால்பாளையத்தில் ரோவர் வேளாண் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் அனுபவங்கள் பெற்று பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை வழங்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக வாழ்மால்பாளையம் கிராமத்தில் ஊரக வேளாண் பணி பயிற்சி திட்டத்தின் கீழ் அக்கிராமத்தைச் சேர்ந்த ஜோதியின் விவசாய நிலத்தில் விவசாயிகளுடன் வேளாண் கல்லூரி மாணவிகள் இணைந்து கொத்தவரங்காய் அறுவடை செய்தனர்.

இந்நிகழ்வில் ரோவர் வேளாண் கல்லூரி மாணவிகள்,விவசாயிகள் கலந து கொண்டனர்.

Tags:    

Similar News