லே-அவுட்டுகளால் விவசாயம் பாதிப்பு - விவசாயிகள் சங்கம் மனு
சீரபாளையம் பகுதியில் லே அவுட்டுகள் கட்டப்பட்டதால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், மனைப்பிரிவின் அங்கீகாரத்தை ரத்து செய்யுவும் கோரி விவசாய சங்கத்தினர் ஆட்சியரின் மனு அளித்தனர்.;
Update: 2024-01-30 04:40 GMT
மனு அளிக்கவந்தவர்கள்
கோவை:சீரபாளையம் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் சுமார் ஐந்து ஏக்கர் நிலத்தில் தென்னை விவசாயம் செய்து வருகிறார்.இவரது விவசாய பூமிக்கு அருகில் செந்தூர் எலைட் டெவலப்பர்ஸ் என்ற பெயரில் வீடுகள் கட்டி விற்பனை செய்யும் லேட் அவுட்டுகள் கட்டப்பட்டுள்ளது.லே அவுட் காரணத்தினால் மழைக்காலங்களில் போதிய வடிகால் வசதி கட்டமைப்பு இல்லாததால் கழிவுகள் விவசாய பூமிக்குள் வந்து சேர்வதால் விளை நிலங்கள் மாசடைவதாகவும் இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் முறையான நடவடிக்கை இல்லை என கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.மேலும் லே-அவுட் அமைத்த நபர்களோடு கைகோர்த்துக்கொண்டு சீரபாளையம் ஊராட்சி செயலாளர் செயல்பட்டு வருவதாக மனுவில் குறிப்பிட்டுள்ள அவர்கள் அந்த மனைப்பிரிவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு உடந்தையாக இருந்து செயல்படும் ஊராட்சி செயலாளரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.