மாம்பாக்கத்தில் எம் ஜி ஆரின் நினைவு தினம் அனுசரிப்பு

எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்

Update: 2023-12-25 08:23 GMT

எம்ஜிஆர் நினைவு தினத்திற்கு அதிமுகவினர் மரியாதை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் கிராமத்தில் அதிமுக திமிரி கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் ஒன்றிய செயலாளர் சொரையூர் எம் குமார், தலைமையில் எம்ஜிஆரின் 36 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் எஸ் எம் சுகுமார், கலந்துகொண்டு ஊர்வலமாக சென்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், பின்னர் கூட்ரோட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பேரூராட்சி செயலாளர் சதீஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேந்திரன், மகளிர் அணி பரிமளா, ஹரிதாஸ் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News