நகராட்சியை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி மாவட்டம்,அம்பாசமுத்திரம் நகராட்சியை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
Update: 2024-02-10 01:50 GMT
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அதிமுக சார்பில் நகராட்சியை கண்டித்து நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுகாதாரமற்ற நீரை வழங்கும் நகராட்சி கண்டித்து கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இதில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.