தேனியில் அதிமுக ஆர்ப்பாட்டம்

பங்களா மேட்டில் கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது.

Update: 2024-06-24 14:10 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தேனி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி பங்களாமேடு பகுதியில் மாவட்ட செயலாளர்கள் ஜக்கையன், முருக்கோடை ராமர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒன்றிய நகர் பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் உள்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கள்ளச்சாராயம் விவகாரத்தில் தீர்வு காணாத தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News