எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி

அரியலூரில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2023-12-01 13:32 GMT

 அரியலூரில் எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அரியலூர் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி இன்று நடைப்பெற்றது. இதனை அரியலூர் கோட்டாச்சியர் ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட சுகாதாரபணிகள் துணை இயக்குனர் சுஜிதா தொடங்கி வைத்தனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் எய்ட்ஸை ஒழிப்போம் பாதுகாப்பாக இருப்போம் என்றும், எய்ட்ஸ் இல்லா உலகை படைப்போம் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு சென்று பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அரியலூர் பேருந்து நிலையத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி தேரடி, சத்திரம், மாதா கோவில் வழியாக சென்று நிர்மலா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் நிறைவடைந்தது. இதில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி நிர்வாகிகள் மற்றும் அரசுதுறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News