இந்தியாவிலுள்ள அனைத்து அரசியலிலும் வாரிசுகள் உண்டு: அமைச்சர்

இந்தியாவிலுள்ள அனைத்து அரசியலிலும் வாரிசுகள் உண்டு என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-11 12:51 GMT
கூட்டத்தில் பேசும் அமைச்சர்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சியில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ ஏற்பாட்டில் குறுங்காடுகள் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் கூட்டத்தில் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், துரை வைகோ அரசியலுக்கு கொண்டு வந்து கெடுத்தது நான் தான்.அவர் தற்பொழுது அரசியல் முழு நேர ஊழியர் ஆகிவிட்டார்.

வைகோவிடம் உங்களுக்கு பின்பு இந்த கட்சியை வழிநடத்த இந்த கட்சி இருப்பதற்கு ஒரு ஆள் தேவை.அதற்கு துரை வைக்க பொருத்தமானவர் அவரை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என என கூறினோம்,அரசியலில துரை வைகோ நிற்க வேண்டும். இந்தியா முழுவதும் வாரிசு அரசியல் இல்லாமல் எந்த கட்சியும் இல்லை.

அனைத்து கட்சியிலும் வாரிசு அரசியல் உண்டு அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை என்றார்.மேலும் பேட்டியின் போது கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News